Posts

Showing posts from 2009

என் கவிதை - முத்துநகர்

தும்பை அணிந்த னையோ பூமிமங்கை என பார்த்ததும் வியப்ப ளிக்கும் - எட்டுத் திசையிலும் கண் எட்டும் வரையிலும் பரந்தெங்கும் தெரியும் உப்ப ளங்கள்! ஆயிர மாயிரம் ஆண்டுகளாய் அள்ளித் தரும் அன்னைமடியா ழங்கண்டு - எங்கும் அணிக்கணி சேர்க்கும் முத்துக் குளித்து தமிழ் மண்ணின் புகழ்சேர்க்கும் முத்துநகர்! ஈன்றவனுக்கு இன்பத்தமிழ் ஈன்ற அழகனவன் தமிழ்க்குறத்தி உடன் அருள்புரியும் - அவன் அறுபடையில் ஒரு படையாய் விளங்கும் திருச் செந்தூர் கொண்ட திருநகரம்! தாய் நாட்டின் துயர்துடைக்க பரங்கியர்தம் பரையறுத்த மறையராம் பொம்மன் - முதல் தீரமிக்க வாஞ்சி உடன்சீர்மிகு சிதம்பரமுங்கூட பாகைக் கவிஞனையும் சேர்த்தளித்த வீரநகர்! அகன்ற வனங்களினூடே ஓடும் ஓடைகள் கரைபுரண்டோடும் கண்மாய்கள் - அதனருகில் இன்பக்களி யாட்டம் போடும் தோகைமயிலென கண்கொள்ளா இயற்கையின் இளையமகள் - எந்தன் நகர்!