காதல் தேவதை
இயற்கை அன்னை யினிகழ்ச்சி காளானேன்
இம்மண்ணுயிர்
வாழ்க்கை க்குமந்த விண்ணுலக
வேந்தர்க்குமிடை
கலகமுற காரணமானேன் - நான்
வேறேதும்
செய்தில்லை உனையுருகி நினைத்ததொழிய.
அகண்ட
வெளியிலே அற்புதம்
புரிந்தவள்
உயிரூட்டம்
கொண்ட ஒற்றைக் கோளவள்
நிலமகள்
முதலவளாவாள் மற்றோர்க்கு – என்
உளமகள்
நீயின்றி என்னுயிரூட்டம் இல்லாதே
நிரின்றி அமையாது உலகென்றான் பெருந்தகை
பரிணாம தினடிப்படை என்றான் அறிவியலான்
இருவரு மிழைக்க வில்லைப்பிழை – என்
உலகென்பது உன்னால் அமையப்பெறு வதினாலே
காற்று வெளியிடையில் காதலை சொன்னாலும்
காற்றைடைத்த பைதான் மெய்யென் றுணர்ந்தாலும்
நின்றிடுமே என்சுவாச மொருகணத்தில்
– என்
நினைவினில் சிந்தைகணமேனும் நீங்கினால் நீ
உருகொண்ட அக்கினி யாகத்தின் உச்சாணி
ஊண்கொண்டு சேர்ப்பதூ மிதுவே தேவர்க்கும்
கொடுப்பதூ மிதூவே அழிப்பதுமிதுவே - என்
நடுஆகம் நிறைந்திட்ட உயிர்த்தீயும் நீயே
அனைத்தையும் அடக்கிய ஆகாச வெளியாம்
அண்டவும் அடையவும் முடியாத முடிவிலியாம்
பிரம்மவடிவமாய் தோற்றத்தின் முதலுமாமது – என்
காரிகைக்குப் பின்னே கடுகாய்த் தெரிவதேனோ?
ஆயிரம் யுகங்களாய் ஆட்டுவைத்த அகந்தைதான்
கயல்விழி யாள்நீ ஒருவுருவாய் தோன்றி
சிற்றானுலகின் ஐம்பூதங் களானதினால் – எனை
குற்றனாய்க் கூடிக்குறை யிட்டார் பேருந்தேவர்.
-
நிரஞ்சன் குமார்
Comments