பாரதியார் கவிதைகள்-1
கண்ணம்மா - அங்க வர்ணனை
பல்லவி
எங்கள் கண்ணம்மா நகைபுது ரோஜாப் பூ;
எங்கள் கண்ணம்மா விழிஇந்த்ர நீலப் பூ!
எங்கள் கண்ணம்மா முகஞ்செந் தாமரைப் பூ;
எங்கள் கண்ணம்மா நுதல்பால சூர்யன்.
சரணங்கள்
1.
எங்கள் கண்ணம்மா எழில்மின் னலைநேர்க்கும்;
எங்கள் கண்ணம்மா புருவங்கள் மதன் விற்கள்;
திங்களை மூடிய பாம்பினைப் போல
சேறிகுழல்; இவள் நாசி எட் பூ.
2.
மங்கள வாக்கு நிதியானந்த ஊற்று;
மதுர வாய்அமிர்தம்; இதழமிர்தம்;
சங்கீத மென்குரல் சரஸ்வதி வீணை;
சாய லரம்பை; சதுர் அயி ராணி
3.
இங்கித நாத நிலைய மிருசெவி;
சங்கு நிகர்த்த கண்டம் அமிர்த சங்கம்;
மங்களக் கைகள் மஹாசக்தி வாசம்;
வயிறா லிலை, இடை அமிர்த வீடு.
4.
சங்கரனைத் தாங்கு நந்திபத சதுரம்;
தாமரை யிருதாள் லக்ஷ்மீ பீடம்;
பொங்கித் ததும்பித் திசையெங்கும் பாயும்
புத்தன்பும் ஞானமும் மெய்த்திருக் கோலம்.
பல்லவி
எங்கள் கண்ணம்மா நகைபுது ரோஜாப் பூ;
எங்கள் கண்ணம்மா விழிஇந்த்ர நீலப் பூ!
எங்கள் கண்ணம்மா முகஞ்செந் தாமரைப் பூ;
எங்கள் கண்ணம்மா நுதல்பால சூர்யன்.
சரணங்கள்
1.
எங்கள் கண்ணம்மா எழில்மின் னலைநேர்க்கும்;
எங்கள் கண்ணம்மா புருவங்கள் மதன் விற்கள்;
திங்களை மூடிய பாம்பினைப் போல
சேறிகுழல்; இவள் நாசி எட் பூ.
2.
மங்கள வாக்கு நிதியானந்த ஊற்று;
மதுர வாய்அமிர்தம்; இதழமிர்தம்;
சங்கீத மென்குரல் சரஸ்வதி வீணை;
சாய லரம்பை; சதுர் அயி ராணி
3.
இங்கித நாத நிலைய மிருசெவி;
சங்கு நிகர்த்த கண்டம் அமிர்த சங்கம்;
மங்களக் கைகள் மஹாசக்தி வாசம்;
வயிறா லிலை, இடை அமிர்த வீடு.
4.
சங்கரனைத் தாங்கு நந்திபத சதுரம்;
தாமரை யிருதாள் லக்ஷ்மீ பீடம்;
பொங்கித் ததும்பித் திசையெங்கும் பாயும்
புத்தன்பும் ஞானமும் மெய்த்திருக் கோலம்.
Comments