பாரதி கவிதைகள்-2
அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்.................!
பாரதியின் பாடல்களில் மிகவும் புகழ் பெற்றவை அவரின் தேசப்பற்று பாடல்கள்.
அவற்றில் ஒன்று,
விடுதலை............ விடுதலை............ விடுதலை...........
1. பறைய ருக்கு மிங்கு தீயர்
புலைய ருக்கும் விடுதலை!
பரவ ரோடு குறவ ருக்கும்
மறவ ருக்கும் விடுதலை!
திறமை கொண்ட தீமை யற்ற
தொழில் புரிந்து யாவரும்
தேர்ந்த கல்வி ஞான மெய்தி
வாழ்வ மிந்த நாட்டிலே.
விடுதலை............ விடுதலை............ விடுதலை...........
2. ஏழை யென்றும் அடிமை யென்றும்
எவனு மில்லை ஜாதியில்,
இழிவு கொண்ட மனித ரென்ப
திந்தி யாவில் இல்லையே!
வாழி கல்வி செல்வ மெய்தி
மனம கிழ்ந்து கூடியே
மனிதர் யாரு மொருநி கர்ச
மான மாக வாழ்வமே
விடுதலை............ விடுதலை............ விடுதலை...........
3. மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமை யைக்கொ ளுத்துவோம்;
வைய வாழ்வு தன்னி லெந்த
வகையி னும்ந மக்குள்ளே
தாத ரென்ற நிலைமை மாறி
ஆண்க ளோடு பெண்களும்
சரிநி கர்ச மான மாக
வாழ்வ மிந்த நாட்டிலே.
விடுதலை............ விடுதலை............ விடுதலை...........
பாரதியின் பாடல்களில் மிகவும் புகழ் பெற்றவை அவரின் தேசப்பற்று பாடல்கள்.
அவற்றில் ஒன்று,
விடுதலை............ விடுதலை............ விடுதலை...........
1. பறைய ருக்கு மிங்கு தீயர்
புலைய ருக்கும் விடுதலை!
பரவ ரோடு குறவ ருக்கும்
மறவ ருக்கும் விடுதலை!
திறமை கொண்ட தீமை யற்ற
தொழில் புரிந்து யாவரும்
தேர்ந்த கல்வி ஞான மெய்தி
வாழ்வ மிந்த நாட்டிலே.
விடுதலை............ விடுதலை............ விடுதலை...........
2. ஏழை யென்றும் அடிமை யென்றும்
எவனு மில்லை ஜாதியில்,
இழிவு கொண்ட மனித ரென்ப
திந்தி யாவில் இல்லையே!
வாழி கல்வி செல்வ மெய்தி
மனம கிழ்ந்து கூடியே
மனிதர் யாரு மொருநி கர்ச
மான மாக வாழ்வமே
விடுதலை............ விடுதலை............ விடுதலை...........
3. மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமை யைக்கொ ளுத்துவோம்;
வைய வாழ்வு தன்னி லெந்த
வகையி னும்ந மக்குள்ளே
தாத ரென்ற நிலைமை மாறி
ஆண்க ளோடு பெண்களும்
சரிநி கர்ச மான மாக
வாழ்வ மிந்த நாட்டிலே.
விடுதலை............ விடுதலை............ விடுதலை...........
Comments