இரண்டாம் தாய்
பிஞ்சுப்
பாதங்கள் முதலில்
புவி
படாமல் தாங்கியபோதும்;
காதணிவிழாவில்
ஓரணி அணிவதற்குள்
கதறிய
அழுகையால் பதறியபோதும்;
அம்மா
என்று அழைப்பதற்க்குள்
அப்பாயென்ற
கொஞ்சல் கேட்டபோதும்;
நடுநிசிகனவில்
துக்கத்தைக் கலைத்து
நெஞ்சில்
விசும்பியபடியே தூங்கியபோதும்;
ஒற்றைமுறையே
நோய்ப்படுக்கையில் கண்டு
ஓராயிரமிரவுகள்
மனம் கணந்திட்டபோதும்;
முதல்காதலின்
வலியில் துலைந்திட்டபோது
மனமுன்னில்
அதிகமாய் வலித்திட்டபோதும்
அடக்கிவைத்த
அன்புத்துளிகள் கண்ணில்
ஆர்ப்பரித்து
கொட்டுதடி! - நீ
ஆனந்தக்
கடலில் மிதந்தே
அடுத்தமனை புகும்பொழுது
- என்
இரண்டாம்
தாயே உனைப்பிரியும்
இக்கணமே உயிர்ப்பிரிவதாய் உணர்கிறேனே!
Comments