இரண்டாம் தாய்
பிஞ்சுப் பாதங்கள் முதலில் புவி படாமல் தாங்கியபோதும்; காதணிவிழாவில் ஓரணி அணிவதற்குள் கதறிய அழுகையால் பதறியபோதும்; அம்மா என்று அழைப்பதற்க்குள் அப்பாயென்ற கொஞ்சல் கேட்டபோதும்; நடுநிசிகனவில் துக்கத்தைக் கலைத்து நெஞ்சில் விசும்பியபடியே தூங்கியபோதும்; ஒற்றைமுறையே நோய்ப்படுக்கையில் கண்டு ஓராயிரமிரவுகள் மனம் கணந்திட்டபோதும்; முதல்காதலின் வலியில் துலைந்திட்டபோது மனமுன்னில் அதிகமாய் வலித்திட்டபோதும் அடக்கிவைத்த அன்புத்துளிகள் கண்ணில் ஆர்ப்பரித்து கொட்டுதடி! - நீ ஆனந்தக் கடலில் மிதந்தே அடுத்தமனை புகும்பொழுது - என் இரண்டாம் தாயே உனைப்பிரியும் இக்கணமே உயிர்ப்பிரிவதாய் உணர்கிறேனே!